வெண்தாமரைபோலப் புனிதத் தோற்றம் கொண்டிருக்கும் துறவு வாழ்க்கையிலும் காமத்தின் நிழலும் சுயநலத்தின் கூச்சலும் நிரம்பியிருப்பதை ஜெஸ்மி பகிரங்கப்படுத்துகிறார். மடத்திலிருந்து வெளியேறியபோது இயேசுவையும் கிறித்துவத்தின் கருணையையும் உடன் கொண்டுவந்ததாகச் சொல்லும் ஜெஸ்மியின் தன்வரலாறு மறைக்கப்பட்ட உண்மைகளின் வாக்குமூலம்.
மலையாளத்தில் வெளிவந்த ஓராண்டுக்குள் ஐம்பதாயிரம் படிகளுக்கும் அதிகமாக விற்பனையாகி ஆங்கிலம் உட்படப் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் நூலின் தமிழாக்கம் இது.