அரசியலின் இலக்கணம்

LKR3,705.00

1 in stock

Author: ஹெரால்டு ஜே.லாஸ்கி

பொதுவாக, அரசியல் குறித்த பேச்சு என்பது தேர்தல்களை ஒட்டிய பேச்சாகவே இருப்பதைப் பார்க்கலாம். கிரிக்கெட் மேட்சில் யார் வெல்வார்கள், எந்தப் படம் நன்றாக ஓடும் என்பது போன்று, எந்தக் கட்சி தேர்தலில் வெற்றி பெரும் என்பதை முன்னிட்டே அரசியல் விவாதிக்கப்படுவது பரவலாக இருக்கிறது. சற்றே சிந்தித்துப் பார்த்தால், அரசியல் என்பது ‘அரசு இயல்’ என்பதும், அரசு என்பது எப்படிச் செயல்படுகிறது, எப்படிச் செயல்பட வேண்டும் என்ற தர்க்கமே அரசியல் என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

தமிழகத்தில் காங்கிரஸ், ‘அந்நியர் ஆட்சியிலிருந்து விடுதலை’, ‘காந்தியின் அகிம்சை’ முதலிய தத்துவங்களை அறிமுகம்செய்தது. ‘இடதுசாரிகள் பொதுவுடமை’, ‘தொழிலாளர் வர்க்கப் புரட்சி’, ‘பாட்டாளி வர்க்க ஆட்சி’ ஆகிய எண்ணங்களை அறிமுகம்செய்தார்கள். திராவிட இயக்கம், பெரியார் பணிகள் ஊடாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்ககாலப் பிரச்சாரங்களிலும் ‘தனிமனிதர்களின் உரிமைகள்’, ‘சமநீதி’, ‘பிரதிநிதித்துவ மக்களாட்சி’ ஆகிய நவீன சுதந்திரச் சிந்தனைகளை வெகுஜனப் பரப்பில் அறிமுகம்செய்து பரவலான அரசியல் சிந்தனைக்கு வித்திட்டது.

இவையெல்லாம் நிகழ்ந்திருந்தபோதும் சிந்தனைப் பரப்பில் நவீன அரசு, இறையாண்மையின் உருமாற்றம் போன்ற கருத்துகள் தொடர்ந்து விரிவாக உள்வாங்கப்பட்டு விவாதிக்கப்படவில்லை. குறிப்பாக, சுதந்திரச் சிந்தனை, பொதுவுடமைச் சிந்தனை இரண்டுக்கும் இடையே சமநீதி, சோஷலிஸம் உள்ளிட்ட முற்போக்கான கொள்கை வடிவங்களைச் சிந்தித்த பல முக்கியமான அரசியல் சிந்தனையாளர்களைக் குறித்த முறையான அறிமுகம் நிகழவில்லை. அவர்களுள் முதன்மையானவர் ஹெரால்டு லாஸ்கி (1893-1950).

அரசியல் சிந்தனையாளராக உருவாகி, கல்விப்புலத்தில் பணியாற்றி, பின்னர் நேரடி அரசியலில் பங்கேற்று, இங்கிலாந்து தொழிற்கட்சியின் தலைவராகி, பிரதமர் அட்லியின் ஆலோசகராக விளங்கிய லாஸ்கியின் அரசு குறித்த சிந்தனைகள் நவீன அரசியலுக்குக் கோவையான, தெளிவான விளக்கத்தை அளிப்பவை எனலாம்.

1 in stock