அமெரிக்க எழுத்தாளராவார். இவரது
தனித்துவமான எழுத்துநடை, மிகக்குறைந்த சொற்பிரயோகக்காரர், 20ஆம் நூற்றாண்டின் புனைகதை இலக்கியத்தில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அதேபோல் இவரது சிலிர்ப்பூட்டக்கூடிய சாகச வாழ்வும் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரது பெரும்பாலான இலக்கிய பங்களிப்புகள் 1920களின் மத்தியிலிருந்து 1950கள் வரை எழுதப்பட்டதாகும். ஏழு நாவல்களும், ஆறு சிறுகதைத் தொகுப்புகளும் இரண்டு புனைவற்ற புத்தகங்களும் தனது வாழ்நாளில் ஹெமிங்வே பதிப்பித்துள்ளார். மேலும் அவரது மறைவுக்குப் பிறகு மூன்று நாவல் களும் நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் மூன்று புனைவற்ற புத்தகங்களும் பிரசுரிக்கப்பட்டது. கடலும் கிழவனும் (The Old Man and the Sea) ល இவருக்கு 1953ஆம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசும் 1954இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. இவர் 1961இல் தற்கொலை செய்து கொண்டார்.