66 σποτ, எதற்கு, எப்படி என்ற முடிவுறா வினாக்களை மனித குலம் எழுப்பியே தனது அறிவுப்புலங்களைக் கட்டமைத்துள்ளது. இவ் வினாக்களுக்கு ஒற்றைப் பதில் இருந்தால் அப்புலம் தேங்கிவிடும். பொருளியல் புலமும் இதற்கு விலக்கல்ல. காலந்தோறும் பல்வேறு அறிஞர்கள் இத்துறைக்கு அறிவுச் செல்வத்தை வழங்கிச் வழங்கி சென்றுள்ளனர். அவை ஒன்றோடு ஒன்று இயைந்தும் முரண்பட்டும் விளக்கி நின்றதால் பொருளியல் என்ற அறிவுப்புலம் வளமானதாகத் திகழ்கிறது. இத்தகைய அறிஞர்கள் பற்றி முழுவதும் அறிந்துகொள்வது இக்கால மாணவர்களுக்கும் பொது வாசகர்களுக்கும் மிகவும் தேவை. அத்தேவையை உணர்ந்து அதற்கெனக் கடுமையாக உழைத்து, தமிழில் நூல்களை வெளிக்கொணரும் அரிய பணியைப் பேராசிரியர் நீலகண்டன் சிறப்பாகச் செய்துவருகிறார். நெருடல் இல்லாத தமிழில் எடுத்துக்காட்டுகளோடு, சிறந்த பல்வேறு பொருளியல் சிந்தனைகள் பற்றிய அறிமுகத்தை வழங்குவது பேராசிரியர் நீலகண்டனின் தனிச்சிறப்பு.”
நவசெவ்வியல் பொருளியல் | Navachevviyal Porulial
Publication :
LKR2,805.00
1 in stock
LKR2,805.00
1 in stock